"நக்கீரனா?ராமலிங்கமா?நாமக்கல் மாநகர தி.மு.க. பொறுப்பாளர் யார்...?

Total Views : 610
Zoom In Zoom Out Read Later Print

நாமக்கல் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவிக்கு பெரிய போட்டி ஏற்பட்டு, இந்தப் பஞ்சாயத்து துணை முதல்வர் உதயநிதியிடம் சென்றிருக்கிறது.

நாம் இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தி.மு.க.மூத்த நிர்வாகி ஒருவருடன் பேசினோம்."சார்,திராவிட மாடல் அரசு புதிதாக கொண்டு வந்த நாமக்கல் மாநகராட்சி சுமார் மூன்று லட்சம் பேர் மக்கள் தொகை கொண்டது.தற்போது நாமக்கல் கிழக்கு,மேற்கு,தெற்கு என்று மூன்று நகர கழகங்களாக உள்ளது. 


இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற தி.மு.க. தலைமை கழகத்தின் முடிவு தள்ளி தள்ளி போகின்ற காரணத்தினால் தி.மு.க. முன்னோடிகள் மாநகரப் பொறுப்பையாவது பிடிப்போம் என்று திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் வக்கீல் நக்கீரனும்,எம்.எல்.ஏ.வும்,பிரபல காண்ட்ராக்டருமான  ராமலிங்கமும் மோதுகின்றனர்.


இதில் மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தன் பங்குக்கு,உங்களை மாநகரமாக்குகிறேன் என்று மூன்று பேரிடமும் உறுதிமொழி கொடுத்துள்ளார்.முன்னாள் மாவட்ட செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான காந்தி செல்வன் தன்னுடைய தீவிர ஆதரவாளர் ஒருவரை மாநகரத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறார்.


35 ஆண்டுகள் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து வாய்ப்புகளைக் கேட்டு வரும் வக்கீல் நக்கீரன் 1994 ம் ஆண்டு வை.கோபால்சாமிக்கு எதிராக கொடி சின்னம்,தி.மு.க. அறக்கட்டளை வழக்குகளில் என்.வி.என்.சோமு,ஆலந்தூர் பாரதி ஆகியோர் தலைமையில் இணைந்து போராடியவர், ஆர்.எஸ்.பாரதியுடன் ஜெ.வுக்கு எதிராக நடந்த டான்சி வழக்கில் மூன்று ஆண்டுகள் ஜூனியராக பணியாற்றியவர்.


தற்போது வரை கட்சியில் முக்கிய பதவியில் இருந்தாலும்,தொண்டர்களுக்கு செய்யக்கூடிய பதவியை எதிர்பார்த்து இந்த முறை மாநகர பதவியை பிடிப்பதற்கு தலைமையை சந்தித்து வருகிறார்.காண்ட்ராக்டர் தொழிலில் மிகவும் பிசியான எம்.எல்.ஏ.ராமலிங்கத்திற்கும் மாநகரப் பொறுப்பாளர் பதவி மீது ஒரு கண்  உள்ளது.அவரும் களத்தில் உள்ளார். இச்சூழலில் தற்போதைய மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் மட்டும் சும்மா இருப்பாரா, அவரும் மூன்று பேருக்கும் நீங்கள்தான் மாநகர பொறுப்பாளர் என்று உறுதி கூறி சமாளித்து வருகிறார்.


தொடர்ந்து மாவட்ட அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,முன்னாள் மாவட்ட செயலாளர் காந்தி செல்வமும் தன் தீவிர ஆதரவாளர் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த முயற்சி செய்து வருகிறார். லாரி தொழில் வளம் மிகுந்த நாமக்கல் மாநகருக்கு தொண்டர்களை அரவணைக்கக் கூடியவர்,குறிப்பாக வக்கீல் நக்கீரன் அவர்களை நியமித்தால் கட்சிக்கும்,ஆட்சிக்கும், மக்களுக்கும் நல்லது என்று தற்போது இந்த பஞ்சாயத்து உதயநிதியிடம் சென்றுள்ளது..."என்று சொல்லி முடித்தார் அந்த தி.மு.க. சீனியர் நிர்வாகி.


முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட உடன்பிறப்புகள்.

See More

Latest Photos