அறிவு என்பது ஒரு மாபெரும் சக்தியாகும். அறிவை வளர்க்கும் நூல்களின் புதையல்தான் நூலகம். நூல்களை வாசிக்கும் ஒருவர் முழு மனிதனாக மாறுகிறார். நூலகம் ஓர் அறிவாலயம். திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலகத்தரம் வாய்ந்த உன்னத நூலகங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தோற்றுவித்து வருகின்றார்.
நூலகத்திற்கு நிதி உதவி வழங்கிய மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் பாராட்டு





வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. புத்தகத்தில் உலகத்தைப் படிக்கலாம். உலகத்தையே புத்தகமாக படிக்கலாம் என்றார் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இவரின் சீரிய முயற்சியில், கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான் அண்ணா நூற்றாண்டு நூலகம். இது ஆசியாவிலேயே தலைசிறந்த நூலகமாக சென்னையில் செயல்படுகிறது.
உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதில் சொன்னார் காந்தியடிகள்.
திராவிட மாடல் ஆட்சியின் பிதாமகன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படி, பெருநகர சென்னையில் உள்ள அரசு நூலகங்களில் பத்து நூலகங்களை தேர்வு செய்து, வாசகர்கள், மாணவர்கள், பொது மக்களின் அறிவு தாகம் தீர்க்க அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நுண்ணறிவு நூலகமாக மாற்றி அமைத்திட, இருபது கோடி ரூபாயினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதி உதவி செய்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் நூலக வளர்ச்சிக்கு பிற துறையிலிருந்து நிதி உதவி அளித்தது இதுவே முதல் முறையாகும். நூலக வாசகர்கள் மீது பேரன்பு கொண்டு நூலகங்களுக்கு மறுமலர்ச்சியும், புத்துணர்வும் அளித்திடும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியிலிருந்து இருபது கோடி ரூபாயினை அரசு நூலகங்கள் வளர்ச்சிக்கு வழங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு தமிழ்நாடு பொது
நூலகத்துறை அலுவலர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.