உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் - ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்பட்டது! ராமநாதபுரம், ஜுன்,6-
உலக சுற்றுச்சூழல் தினம்





உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் - ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்பட்டது!
ராமநாதபுரம், ஜுன்,6-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் விழா ராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கன்வீனர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளி, வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தொருவளூர் அரசு பள்ளி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட ஆறு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இயற்கையாகவே நாம் மரங்கள் வளர்க்கும் போது வெப்பத்தை குறைப்பதற்கும் இயற்கையான சூழல் உருவாவதற்கும் காரணமாக அமைகிறது. இயற்கை என்பது ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. எல்லோரும் மரங்கள் நடுவதோடு நின்று விடாமல் அவற்றை பராமரித்து வளர்க்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ரவி, சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், தஸ்தகீர் பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ , ஜேஆர்சி பொருளாளர் குணசேகரன், மண்டபம் கன்வீனர் பாலமுருகன், சுபாஷ் சந்திர போஸ், ராமகிருஷ்ணன், தேவிகா, ஆலிஸ் ஞான தங்கபுஷ்பம், சாகுல் மீரான் , திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் சிவசாமி, திருப்புல்லாணி பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திர கண்ணன், ஜாகிர் உசேன், ஜீவா, உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி மாவட்ட கன்வீனர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.