ராமநாதபுரத்தில் கம்பன் கழகம் 26 ஆம் ஆண்டு விழா - தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் பங்கேற்பு!

Total Views : 335
Zoom In Zoom Out Read Later Print

ராமநாதபுரம், அக்,1- ராமநாதபுரம் கம்பன் கழகம் 26 ஆம் ஆண்டு விழா ராமநாதபுரம் தனியார் மஹாலில் கம்பன் கழக நிறுவன தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் பொதுச் செயலாளர் புலவர் மாயழகு மற்றும் கம்பன் கவிதையின் சிறப்பு என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் கம்பன் கழக கௌரவ தலைவர் கவிதா கதிரேசன், கவிஞர் இளஞ்செழியன், புலவர் அப்துல் மாலிக் உள்பட பலர் பேசினர். மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் கலந்து கொண்டு எஸ்.பி‌.பட்டணம் ஜமாஅத் தலைவர் ஹசன் அலி க்கு கம்பன் சமய நல்லிணக்க விருது உள்பட பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். முத்தமிழ் மன்ற நிறுவனர் ஜஹாங்கிர் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து கம்பன் கழக பொதுச் செயலாளர் கவிஞர் மானுடப் பிரியன் தலைமையில் இன்றைய இளைஞர்களுக்கு உந்து சக்தியாக பெரிதும் விளங்குவது ராமனின் தலைமைப்பண்பா... அனுமனின் சேவைத்தன்மையா... என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில் முத்தமிழ் மன்ற நிறுவனர் ஜஹாங்கிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கம்பன் கழக செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.


See More

Latest Photos