தென்காசி மாவட்டம் முத்துகிருஷ்ணபேரி ஊராட்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் இனிப்புகள் வழங்கியும் 30 சேர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
அங்கன்வாடியில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.




தென்காசி:நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் தலைமை தாங்கினார் கிளைக் கழக செயலாளர் எம் எஸ் மூர்த்தி பிரதிநிதி தங்க பெருமாள் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சிவராஜ்பாண்டியன் அவர்கள் வரவேற்று பேசினார்கள்.
முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் அவர்கள் ஏற்பாட்டில் அங்கன்வாடிக்கு 30 சேர்கள் வழங்கப்பட்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய பெருந்தலைவர் காவேரி சீனித் துரை முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ் பொறியாளர் அணி கபில்தேவதாஸ் ,விஜயன்,மாவட்ட மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் ஒன்றிய பிரதிநிதி சேர்மலிங்கம் கழுநீர் குளம் செயலாளர் சின்ன முருகன் ,தங்க பெருமாள் நயினார் சொல்லின் செல்வன் மகேந்திரன் சுப்பிரமணியன் சுப்பையா வேல்முருகன் மகளிர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் அம்பிகா மாரியப்பன் சந்திரன் / ராஜா, விஜய் ஹரி பரமேஸ்வரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பொன் மோகன்ராஜ் நன்றி கூறினார்.