பிசிஆர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்!

Total Views : 34
Zoom In Zoom Out Read Later Print

ராமநாதபுரம், ஜுன்,6- ராமநாதபுரத்தில் பிசிஆர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இளமனூர் கிராம மக்கள் மற்றும் அகமுடையார் புலிப்படை அமைப்பினர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் பிசிஆர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்!

ராமநாதபுரம், ஜுன்,6-

ராமநாதபுரத்தில் பிசிஆர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இளமனூர் கிராம மக்கள் மற்றும் அகமுடையார் புலிப்படை அமைப்பினர் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த மே28 ந்தேதி ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பாபு என்பவர் மீது ஒரு சிலர் தாக்குதல் நடத்தியதில் ஏற்பட்ட மோதலில் இளமனூர் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் , சிவக்குமார் ஆகியோர் மீது பிசிஆர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே நேற்று இளமனூர் கிராம பொதுமக்கள் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன், அகமுடையார் புலிப்படை தலைவர் ரெத்தினக்குமார் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி பாபு (46) மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும், பிசிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை  விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன், அகமுடையார் புலிப்படை தலைவர் ரெத்தினக்குமார் உள்பட கிராமத்தை சேர்ந்த சிலர் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

See More

Latest Photos