ராமநாதபுரம், ஜுன்,11- ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் உலக விளையாட்டு தினத்தையொட்டி நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் திருவாடானை எம்எல்ஏ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
ராமநாதபுரத்தில் உலக விளையாட்டு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி - எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!





ராமநாதபுரத்தில் உலக விளையாட்டு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி - எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
ராமநாதபுரம், ஜுன்,11-
ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் உலக விளையாட்டு தினத்தையொட்டி நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் திருவாடானை எம்எல்ஏ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
உலகில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 11ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து விளையாட்டை தேர்ந்தெடு ஒவ்வொரு நாளும் என்ற இந்த வருட மையக்கருத்தையொட்டி ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பசுமை முதன்மை விருதாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாட்டில் நடந்த இவ்விழாவில் திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் வட்டார தலைவர் காருகுடி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.