சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஆன்மீக பூமி.இங்கு பல்வேறு திருத்தலங்கள் உள்ளது. தற்போது தாரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு காக்கிகள் மாவட்ட எஸ்.பி. கௌதம் கோயல் பெயரை 'களங்கப்படுத்தி' வருகிறார்கள். இவர்களது அராஜகம் அத்துமீறி போய்க் கொண்டுள்ளது. ஆன்மீக பூமி அராஜக பூமியாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
2 காவல்துறையினர் அராஜகம் பொதுமக்கள் அச்சம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நடவடிக்கை எடுப்பாரா?





சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பெயரில் 'களங்கப்படுத்தும்'இரண்டு தாரமங்கலம் காக்கி சட்டைகள்.. அச்சத்தில் பொதுமக்கள்.. நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஆன்மீக பூமி.இங்கு பல்வேறு திருத்தலங்கள் உள்ளது. தற்போது தாரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு காக்கிகள் மாவட்ட எஸ்.பி. கௌதம் கோயல் பெயரை 'களங்கப்படுத்தி' வருகிறார்கள். இவர்களது அராஜகம் அத்துமீறி போய்க் கொண்டுள்ளது. ஆன்மீக பூமி அராஜக பூமியாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவில்,பள்ளிக்கூடம்,மருத்துவமனை என நீக்கமர தாரமங்கலம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை நடந்து வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் காவல் நிலையம் சென்று புகார் தெவித்தால் உதவி ஆய்வாளர் அழகுதுறை என்பவர் "யோவ், அப்படித்தான் விற்பனை செய்வார்கள். இதில் வரும் மாமூல் பணத்தை வசூல் செய்து சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் கொடுக்கிறோம்.மதியம் பனிரெண்டு மணிக்கு அரசாங்கம் சரக்கு விற்பனை செய்யுது.அதை போய் முதல்வர் ஸ்டாலினிடம் தட்டிக் கேளுங்க. மரியாதையாக ஓடிப் போயிடுங்க.. இல்லையென்றால் நாங்குநேரி சம்பவம் போல் இங்கேயும் நடந்து விடும்.."என்று கடுமையாக மிரட்டுகிறார்.'என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
உதவி ஆய்வாளர் அழகுதுறைக்கு உதவியாக இருப்பவர் ஏட்டு தங்கராஜ். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்துதான் காக்கிச்சட்டைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஐந்து பவுன் நகை மற்றும் 87 ஆயிரம் ரூபாய் பணத்தை அழகுதுறையும்,தங்கராஜிம் களவாடி உள்ளார்கள்.
இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது. விரைவில் இந்த அநியாயம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட உள்ளது. இவர்கள் இரண்டு பேர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொளதம்கோயல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்...?